12.12.09


அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்.

இப்போது இளைய தலைமுறையினரிடம் இருந்தும் அக்கறை பொதிந்த கடிதங்கள் வரத் துவங்கி இருக்கின்றன. தாங்கள் கல்வி பயின்ற கல்விக் கூடங்கள் பற்றிய அக்கறைகள் காட்டும் இவர்களுக்கு என் தலைவணக்கங்கள்.இவை போன்ற கடிதங்களால் நம்பிக்கை மேலும் வலுப்படுகிறது.


அன்புடன்

ராகவன் தம்பி



The main reason is they were shunted out by the vested interests for their self promotion. Several representations made various quarters went unheard by the authorities concerned.


மேலும் வாசிக்க...

10.12.09

செல்வராஜன் கடிதம்



அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்.

இன்று என்னுடைய நண்பர் செல்வராஜன் தமிழ்ப் பள்ளிகள் குறித்து அக்கறை பொதிந்த ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அவருக்கு என் நனறி.

செல்வராஜன் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். கானுயிர்கள் மீது அளப்பரிய அக்கறை கொண்டவர். தமிழகத்தில் வங்கி அதிகாரியாகப பணியாற்றியபோது நிறைய தொண்டு புரிந்து இருக்கிறார். டெல்லியில் கிரின் சர்க்கிள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்தி நிறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருக்கிறார். அவருடைய அமைப்புக்காக ஜனக்புரி தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு வீதி நாடகப் ப்யிற்சி அளித்தேன். மாணவர்கள் தயாரித்த இரு நாடகங்களை மேற்கு டெல்லி கிராமங்களிலும் திஹார் சிறையிலும் நடத்தினோம். நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகம் கிடைக்காததால் கிரீன் சர்க்கிள் இப்போது சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது.

செல்வராஜன் சொல்லி இருக்கும் பல விஷயங்கள் நம்முடைய கவனிப்பை ஈர்க்கும் தன்மை கொண்டவை. அவருடைய இந்தக் கடிதம் சுமந்திருக்கும் செய்திகள் பல.

தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயங்களை சர்வ சாதாரணமாக சொல்லியிருக்கிறார் செல்வராஜன். அவருக்கு என்னுடைய நன்றி.

அன்புடன்

ராகவன் தம்பி

செல்வராஜன் கடிதத்தைப் படிக்க...

http://www.vadakkuvaasal.com/